Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட தையல் கலைஞர்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் எம்.அசோகன், சங்க மாவட்ட செயலாளர் மாவட்ட என்.வேலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
மேலும் கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப கூலி
உயர்வு வழங்க வேண்டும். கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு துணி வழங்கும் போது நாடா, பட்டன், ஜிப்பு ,நூல் ஊசி வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகாவில் கூட்டுறவு சொசைட்டி ஆரம்பித்து, தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.
தையல் தொழிலாளர்களுக்கு தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தையல் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.